world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஈய மாசுபாட்டால்  வங்கதேச குழந்தைகள் பாதிப்பு  

உலகளவில் ஈய மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் வங்கதேசம் நான்காவது இடத்தில் உள்ளது. இந்நாட்டில் சுமார் 3.5 கோடிக்கும் அதிகமான குழந்தைகளின் உடல் ரத்தத்தில் ஈய அளவு ஆபத்தான அளவில் உள்ளது  என ஐ.நா குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து  ஈய நச்சுத்தன்மை பாதிப்பு குறித்து பதிலளிக்கவும், சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் ஆய்வகங்களின் திறனை அதிகரிப்பதற்கான திட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது.

லெபனானில் உதவிகளை  தொடரும் ஐ.நா.

இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலுக்கு இ டையிலும்  லெபனானில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஐ.நா நிவாரண அமைப்புகள் தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் செய்து  வருகின்றன. இதனை ஐ.நா பொதுச்செயலாள ரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் உறு திப்படுத்தியுள்ளார். லெபனானில் உள்ள பாலஸ் தீன அகதிகள் முகாமுக்கு மருத்துவப் பொருட்கள், மின்சாரத்திற்கான ஜெனரேட்டர்கள், எரிபொருட் கள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களை  தொடர்ந்து வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோவ் கால்லண்ட்  பதவி நீக்கம்

இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கால்லண்டை அதிரடியாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு. கடந்த சில மாதங்க ளாக அவரது செயல்பாடுகள் நம்பிக்கை கொடுக்கவில்லை எனவும்,அதனால் அவரை பதவி நீக்கம் செய்வதாகவும் அவர் குறிப்பிட் டுள்ளார். அவருக்குப் பதிலாக தீவிர இனப்படுகொலை ஆதரவு , யூத மதவெறியரான இஸ்ரேல் காட்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்ச ராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இண்டர்போல் அமைப்பிற்கு  புதிய பொதுச் செயலாளர்

ஸ்காட்லாந்தில்  நடந்த இண்டர்போல் உயர்மட்ட தலைவர்கள்  கூட்டத்தில் புதிய பொதுச் செயலாளராக பிரேசில் காவல்துறை அதிகாரி வால்டெசி உர்கிசா தேர்வு செய்யப்பட்டுள்ளார். வால்டெசி உர்கிசா தற்போது இண்டர்போலின் அமெரிக்காவுக்கான துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். ஜெர்மன் நாட்டை சேர்ந்த அதிகாரியான ஜூர்கன் ஸ்டாக்  2014  முதல் பொதுச் செயலாளராக இருந்த நிலையில் விதிகளின்படி மூன்றாவது முறையாக பதவியேற்க  அனுமதிக்கப்படவில்லை.

இஸ்ரேல் மீது  இராக்கில்  இருந்து டிரோன் தாக்குதல் 

இனப்படுகொலை எதிர்ப்புக் குழு இராக்கில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஹபிபா துறைமுகத்தில் உள்ள முக்கிய இலக்கை குறிவைத்து டிரோன் மூலம் இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்பாவி பாலஸ்தீன குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடைபெறும் இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலுக்கு பதிலடியாக தங்கள் தாக்குதல்கள் தொடரும் எனவும்  இனப்படுகொலை எதிர்ப்புக்  குழு தெரிவித்துள்ளது.