world

img

ஈரானில் பெண்ணுரிமைப் போராட்டங்கள் தீவிரம்

டெஹ்ரான்: ஈரானில்  மாசா அமினி என்ற பெண் மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு ஆகும் சூழலில் பொருளாதார பின்னடைவு மற்றும் மத அடிப்படைவாதிகளின் மீதான கோபம் அந் நாட்டின் அரசியல் சூழலை தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானில் கடந்த ஆண்டு செப்டம்பர் 6 அன்று மாசா அமினி என்ற இளம் பெண் ஆடை விதி முறையை  மீறியதாகக் கூறி மத அடிப்படைவாதிக ளால் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தார். இது நாட்டில்  மிகப் பெரிய  அரசியல் கொந்தளிப்பை ஏற் படுத்தி பெண்களின் தன்னெழுச்சியான  போராட் டங்களுக்கு வழிவகுத்தது.  அமினியின் கொலைக்கு பிறகு  “பெண், வாழ்க்கை, சுதந்திரம்” என்ற முழக்கத்தை முன்வைத்து மாண விகள் உட்பட பெண்கள் தன்னெழுச்சியாக வீதிக்கு வந்து தங்கள் தலையில் இருந்து ஹிஜாப்பை சுழற்றி வீசியெறிந்து, மத தலைவர்களுக்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்டனர். இப்போராட் டத்திற்கு ஆதரவாக நாட்டின் விளையாட்டு வீராங்க னைகள் ஹிஜாப் அணியாமல் விளையாடினர். இதனை தொடர்ந்து அவர்கள் வெளிநாடு பயணம் செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்தது.   பல சமயங்களில் போராட்டக்காரர்கள் மீது அரசு துப்பாக்கிப் பிரயோகம் செய்தது.  இப்பிரச்சனையை யொட்டி இதுவரை ஏழு நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதே  வேளை யில் போராட்டத்தில் சில காவலர்களும் பலியாகி யுள்ளனர். தங்கள் சுதந்திரத்தை கோரியும் கட்டாய ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராடும் பெண்களின் எண்ணிக்கை ஈரானில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.