world

img

தென்னாப்பிரிக்க வேலைநிறுத்தம்!

தென்னாப்பிரிக்காவில் உள்ள சிபன் யீ ஸ்டில் வாட்டர் தங்க சுரங்கத்தில் 30 ஆயிரம் தொழிலாளர் மார்ச் 9 முதல் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். தற்போது இவர்களது மாத சம்பளம் 9000 ரேண்டாக உள்ளது .ஒரு ஆப்பிரிக்க  ரேண்ட் என்பது ரூபாய் 4 ரூபாய் 91பைசா ஆகும் .மாத சம்பளம் 10,000 ரேண்ட் ஆக  இருந்தால் மட்டுமே வங்கிகள் வழங்கும் வீட்டு வசதி கடன் பெற தகுதி கிடைக்கும். வேலையற்றோருக்கு அரசு வழங்கும் வீட்டுவசதி நல நிதி தொழிலாளர் பெற முடியாது .எனவே தங்கச் சுரங்கத் தொழி லாளர்கள் ஊதியம் ஆயிரம் ரேண்டு அதிகப்படுத்த கோருகின்றனர் .நிர்வாகமோ  800 ரேண்ட் மட்டுமே ஊதிய உயர்வு வழங்க முடியும் என அடம்பிடிக்கிறது.

கம்பெனியின் முதன்மை நிர்வாக அதிகாரி 30 கோடி ரேண்ட் பெறுகிறார் .இதை நியாயப்படுத்தவும் செய்கிறார் .30 ஆயிரம் தொழிலாளர் கேட்கும் ஆயிரம் ரேண்ட் உயர்வு என்பது மூன்று கோடி ரேண்டு தான் வருகிறது. வேலை நிறுத்தம் செய்வதால் தொழிலாளர்களுக்கு சம்பள இழப்பு அடிப்படை சம்பளம் மற்றும் இதர  பணப் பயன்களை சேர்த்தால் 37 ஆயிரம்  ரேண்ட் வருகிறது .உடனடியாக வேலை நிறுத்தம் முடிந்தாலும், இழப்பை ஈடுகட்ட இரண்டு ஆண்டுகளாகும். கோரிக்கை வெற்றி பெற்றாலும் இழப்பை ஈடுகட்ட 20 மாதங்கள் ஆகும். மே 17 இல் நடைபெற்ற நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை. சிபன் யீ ஸ்டில் வாட்டர் தங்கச் சுரங்கத்  தொழிலாளர்களில் பாதிப்பேர் அசோசி யேஷன் ஆஃப் மைன் ஒர்க்கர்ஸ் அண்ட் கன்ஸ்டிரக்சன் யூனியனிலும் மீதி பாதி பேர் நேஷனல் யூனியன் ஆஃப் மைன் வொர்க்கர்சிலும் உள்ளனர். வேலை நிறுத்தம் தொடங்கிய மார்ச் 9 முதல் அன்றாடம் முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது.

பிளாட்டினம் சுரங்கத் துறையில், பத்தாண்டுக்கு முன் மாரி கானா என்ற  ஊரில் மாத ஊதியம் 12,500 ரேண்ட் கேட்டு  வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர் மீது அடக்குமுறை ஏவப்பட்டது .அவர்கள் தற்போது 13 ஆயிரம் ரேண்ட் ஊதியம் பெறுகிறார்கள் .தங்க சுரங்கத்தை விட நாலாயிரம் ரேண்ட் அதிகம். சிபன் யீ ஸ்டில்வாட்டர் பிளாட்டினம் சுரங்கத்தில் ஊதிய பேச்சுவார்த்தை விரைவில் துவங்க உள்ளது. தென்னாப்பிரிக்காவில் மிகப்பெரும் சங்கமான நேஷனல் யூனியன் ஆஃப்  மெட்டல் ஒர்க்கர்ஸ் ஆப் சவுத் ஆப்பிரிக்கா தங்கச் சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வரு கிறது. ஆயிரம் ரேண்ட் ஊதிய உயர்வு நியாயமானது என கூறியுள்ளது . ஹார்மணி கோல்டு என்ற கம்பெனியில் சங்கங்கள் மிகக் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளிக்கு மாதம் ஆயிரம்  ரேண்ட் உயர்வுடன் ஒப்பந்தம் செய்துள் ளன. தற்போது 10 ஆயிரத்து 478 ரேண்ட் ஊதியம் பெறும் இவர்கள் ஒப்பந்தத்தின் மூன்றாம் ஆண்டில் 13 ஆயிரத்து 478 ரேண்ட் பெறுவர். ஆர்செலார் மிட்டல் என்ற தென்னாப் பிரிக்காவின் மிகப்பெரும் உருக்கு உற்பத்தியாளர் ஆலையில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தொழிற்சங்க பிரிவான கொசாட்டூ வில்  பெரும்பாலான சங்கங்கள் இணைந்துள் ளன. பொது சேவை ஒருங்கிணைப்பு கூட்டு பேர் கவுன்சிலில் 10 சதவீத ஊதிய  உயர்வு கோரிக்கையை முன்வைத்துள் ளது. நிதிமூலதன நிர்பந்தத்தால் ஊதியக் குறைப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்கும். வரும் மாதங்களில் தென்னாப் பிரிக்காவில் பெரும் போராட்டங்கள் வெடிக்கும்.