world

img

அகர்தலாவில் சிபிஎம் மாநில மாநாடு தொடங்கியது ஆயிரக்கணக்கானோர் பேரணி

அகர்தலா, பிப்.26- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திரிபுரா மாநில மாநாடு அகர் தலாவில் வியாழனன்று பேரணி - பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது. மாநாட்டுப் பேரணியில் பல்லா யிரக்கணக்கானோர் செங்கொடிகளு டன் அணிவகுத்துச் சென்றனர். தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. மாநாட்டு பேரணி பொதுக்கூட்டத் தில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், மாணிக் சர்க்கார், மாநிலச் செயலா ளர் ஜிதேந்திர சவுத்ரி, அகோர் தேப் பர்மா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர். மாநாட்டையொட்டி செய்தியா ளர்களிடம் பேசிய ஜிதேந்திர சவுத்ரி, திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புத்தெழுச்சி பெறுவதன் ஒரு பகுதிதான் இந்த மாநாடு. திரிபுரா வில் மக்கள் விரோதக் கொள்கை களை அமல்படுத்தி வரும் பாஜக அர சுக்கு வரும் காலங்களில் மக்கள் சரி யான பாடம் புகட்டுவார்கள் என்றார்.