லிமா, டிச.16- தென் அமெரிக்க நாடான பெருவில் நிலவி வரும் அரசியல் சூழலுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் எழுச்சிப் போராட்டங்களுக்கு அறை கூவல் விடுத்து வருகிறார்கள். தனது திட்டங்களுக்கும், முன்மொழிவுகளுக்கும் தடையாக இருந்த எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் பான்மை இருந்த பெரு நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த ஜனாதிபதியாக இருந்த பெட்ரோ காஸ்டில்லோ முடிவு செய்தார். இதற்கு பதில் நடவடிக்கையாக காஸ்டில்லோ வைப் பதவியில் இருந்து நீக்கியதோடு அவரை சிறையிலும் அடைத்தனர். அவரோடு இணைந்து தேர்தலில் போட்டியிட்ட துணை ஜனாதிபதி டினா போலுவார்ட்டே, எதிர்க்கட்சிகளோடு கைகோர்த்து ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். முதலாளிகளின் தூண்டுதலால் நாடாளு மன்றம், பெரும்பாலான ஊடகங்கள், நீதித்துறை யின் ஒரு பகுதி உள்ளிட்டவை காஸ்டில்லோவுக்கு எதிராக அணி திரண்டன. இதைக் கலகம் என்று வர்ணிக்கும் சமூக அமைப்புகள், “திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ள இந்த கலகத்திற்கு எதிராக மக்களின் எழுச்சியை நாங்கள் அறிவிக்கிறோம். பெரு முதலாளிகளுக்காக இயங்கும் இவர்க ளின் கலகத்தை முறியடிப்போம்” என்று தெரி வித்துள்ளன.
பெரு தொழிலாளர்கள் கூட்டமைப்பு, பெரு விவசாய மற்றும் கிராமப்புற முன்னணி, மக்க ளின் தேசிய அவை ஆகியவற்றோடு மேலும் பல அமைப்புகள் போராட்டக்களத்தில் குதித்துள் ளன. போராட்டம் குறித்த தங்கள் அறிக்கையில், “நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தை போராட்டக் களத்தில் இறங்குமாறு நாங்கள் அழைக்கிறோம். பெருவின் தெருக்களை தொழி லாளர்கள் நிரப்புவார்கள். மக்களின் விருப்பத்தி ற்கு விரோதமாக இயங்கும் நாடாளுமன்றத்தை இழுத்து மூட வேண்டும். மீண்டும் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். புதிய அரசியல் சட்டம் உருவாவது அவசியம். அனைத்து அதி காரங்களும் மக்களின் கைகளில்தான் இருக்க வேண்டும்” என்று பெரு தொழிலாளர்கள் கூட்ட மைப்பு தெரிவித்துள்ளது. கலகம் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட காஸ்டில்லோவை சிறையில் இருந்து விடுவித்து, மீண்டும் அவரை ஜனாதிபதிப் பொறுப்பில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தேர்தலை முன்கூட்டி நடத்தலாம் என்ற டினா போலுவார்ட்டேயின் அறிவிப்பு மக் களை அமைதிப்படுத்தவில்லை. இதனால், 30 நாட்களுக்கு அவசர நிலையை நடைமுறைப் படுத்துவதாக அறிவித்திருக்கிறார்கள். அதோடு, மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்த ஒடுக்கு முறையை அவிழ்த்து விட்டுள்ளனர். இதுவரை ில் போராடி வரும் மக்களில் எட்டு பேர் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.
வேலை நிறுத்தம்
சமூக அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த வேலை நிறுத்தத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. தங்கள் கோரிக்கைகள் நிறை வேறும் வரையில் போராட்டங்கள் நடப்பதோடு, மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் சமூக அமைப்புகள் கூறியுள்ளன. தலைநகர் லிமாவில் ஆயிரக்கணக்கான மக்கள் நாடாளு மன்ற எதிர்ப்பு முழக்கங்களுடன் வீதிகளி வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அரேகுய்பா, கஸ்கா மற்றும் கஜாமார்கா போன்ற பகுதிகளில் மக்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறு கிறது. அடக்குமுறையால் மட்டும் மக்களைச் சமாளிக்க முடியாது என்று பிராந்திய நிர்வா கங்கள் கருத்து தெரிவிக்கின்றன. அமெரிக்கா வின் ஆதரவுடன் நடைபெற்ற “நாடாளுமன்றக் கலகம்” என்று வர்ணிக்கும் சமூக மற்றும் தொழிலாளர் அமைப்புகள், மக்களின் விருப்பத்திற்கு எதிராக இது நடந்துள்ளது என்று சுட்டிக்காட்டுகின்றன. இத்தகைய அரசியல் சூழல் கவலை அளிப்பதாக மெக்சிகோ, வெனிசுலா, அர்ஜெண்டினா மற்றும் பொலிவியா அரசுகள் தெரிவித்துள்ளன.
முதலில் ஏழு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட காஸ்டில்லோவிற்கு தற்போது 18 மாதங்கள் சிறைத்தண்டனை என்று எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீதித்துறை அறிவித்துள்ளது. அவரை வெளியில் விட்டால், மக்களின் எழுச்சி அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுவதே இந்த சிறைத்தண்டனை நீட்டிப்புக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
‘‘கம்யூனிச பூதம்’’
காஸ்டில்லோவுக்கு எதிரான இந்த சதி வலைக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மார்க்சிய சுதந்திர பெரு கட்சி யின் சார்பில் போட்டியிட்ட காஸ்டில்லோ, சர்வாதிகாரி ஃபுயுஜிமோரியின் ஆதரவா ளர்களை எதிர்த்துக் களம் கண்டார். இடது சாரிகளை ஒடுக்குவதில் அமெரிக்கா ஆதர வுடன் செயல்பட்ட ஃபுயுஜிமோரியின் மகள் காஸ்டில்லோவை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். காஸ்டில்லோ வின் வெற்றியை வழக்கொழிந்து போன “கம்யூனிச பூதம்” என்ற வார்த்தையால் அமெரிக்கா பிற நாடுகளை அச்சுறுத்த முயல்கிறது என்று பெருவின் சமூக அமைப்பு கள் குற்றம் சாட்டியுள்ளன.