world

img

பஞ்ச அபாயத்தில் 90 லட்சம் மக்கள் - ஐ.நா அதிர்ச்சி தகவல்

ஆப்கானிஸ்தானில் பஞ்ச அபாயத்தில் 90 லட்சம் மக்கள் சிக்கி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து அங்கு பொது மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தாலிபன்கள் ஆட்சியால் உருவாகி உள்ள பெண்களுக்கு கல்வி, வேலைக்குச் செல்ல முடியாத சூழல், போரின் தாக்கம், உள்ளிட்ட பல பிற்போக்கு நடவடைக்கைகளால் அங்கு கடும் பொருளாதார நெருக்கடி உருவாகி உள்ளது. 
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை கூறியதாவது, ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்தாலும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொருளாதாரம் மிகவும் சிதைந்துள்ள சூழலில்  சுமார் 90 லட்சம் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். 
இதனால் ஆப்கானிஸ்தானுக்கு ஐ.நா. உதவி செய்ய உலக நாடுகள் நிதியளிக்க முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.