world

ஜனாதிபதியாக தொடரும் நிக்கோலஸ் மதுரோ

காரகஸ், ஆக. 27 - வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவின் வெற்றியை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக் கிறது.

வெனிசுலாவில் குழப்பம் விளை விக்கலாம் என்ற அமெரிக்காவின் திட்டம், வெனிசுலா உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் உடைந்து நொறுங்கியது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 28 அன்று நடைபெற்றது. இதில்  தற்போதைய ஜனாதிபதியும், வெனிசுலா சோசலிஸ்ட் கட்சியின் தலைவருமான நிகோலஸ் மதுரோ மீண்டும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஆனால், அமெரிக்காவின் தூண்டுதல் பேரில், வெனிசுலா நாட்டு எதிர்க்கட்சிகள் ‘தேர்தலில் முறைகேடு’ என்று கூப்பாடு போட்டன.

‘தேர்தல் நியாயமாக நடந்தது’  என்று அந்நாட்டின் தேர்தல் ஆணை யம் கூறியதை ஏற்க மறுத்துவிட்ட அவர்கள், வெனிசுலா உச்ச நீதி மன்றத்திற்குச் சென்றனர். அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும், ஆவ ணங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், நிகோலஸ் மதுரோவின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது. 

அவரது வெற்றி குறித்த அறி விப்பை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அதை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வமாக வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தர விட்டுள்ளது.

“கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பல நாடு களில் நீதிமன்றம் தான் தேர்தல் முடிவு களை உறுதிப்படுத்தியுள்ளன” என்பதைச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி கரிஸ்லியா ரோட்ரிகஸ், “எதிர்க்கட்சிகள் சில மோசடியான ஆவ ணங்களைத் தாக்கல் செய்திருக்கின் றன. அதுபற்றித் தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்” என்று கூறியுள் ளார்.

முன்னதாக, வெனிசுலா சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நிகோலஸ் மதுரோவுக்கு 52 விழுக் காடு வாக்குகளும், அமெரிக்க ஆதரவு வேட்பாளரான எட்மண்டோ கொசா லசுக்கு 43 விழுக்காடு வாக்குகளும் கிடைத்தன. ஆனால், ‘கோன் சாலஸ்தான் வெற்றி பெற்றார்’ என்றும், ‘அவரை ஜனாதிபதியாக அங்கீகரிக் கிறோம்’ என்றும் கூறி குழப்பம் விளை விக்க முயன்ற அமெரிக்க அரசுக்கும் வெனிசுலா உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தோல்வியைத் தந்துள்ளது.

“நிகோலஸ் மதுரோ மீது அதிருப்தி இருந்தாலும், வலதுசாரி சக்தி களைத் தடுக்கவே மக்களில் ஒரு  பகுதியினர் அவருக்கு வாக்களித்திருக் கிறார்கள்,” என்றும்; “இடதுசாரிக் கொள்களை நடைமுறைப்படுத்து வதில் அரசியல் உறுதியை அவர் காட்ட வேண்டும்” என்றும் வெனி சுலாவின் இடதுசாரி அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வெனிசுலாவில் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் நிகோலஸ் மதுரோ, 2025 ஜனவரி 10 முதல் 2031 ஜனவரி 10 வரை பதவியில் இருப்பார்.