சென்னை, ஆக. 12- தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தேனி, கன்னி யாகுமரி, சிவகங்கை, விருது நகர், திண்டுக்கல், மதுரை ஆகிய தென் மாவட்டங்களி லும், சென்னை, காஞ்சி, திரு வள்ளூர், கடலூர், விழுப்பு ரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய கடலோர மாவட்டங்க ளிலும் லேசானது முதல் மித மான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு குறைந் துள்ளதாகவும், அந்த மாவட்டங்களில் ஓரிரு இடங் களில் லேசானது முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்ப தாக கூறப்பட்டுள்ளது. தமிழக கடற்கரை பகுதி களில் மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்பதால் மீன வர்கள், அடுத்த இரண்டு நாட் கள் கடலுக்கு செல்ல வேண் டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என்று மீனவர் களுக்கு எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. வடமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும், அது சத்தீஸ் கர் நோக்கிச் செல்லும் பட்சத் தில் கேரளாவில் மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்து டன் காணப்படும். ஒரு சில நேரங்களில் மழையோ அல் லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.