weather

img

நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு....

சென்னை:
நீலகிரி, கோவை, தேனி,திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம்தெரிவித்துள்ளது.இந்நிலையில் அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ் தே புயல் காரணமாகதமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி தமிழகத்தின் கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;