technology

img

கேஷியர் , பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட் ! 

துபாய் : துபாயில் கேஷியர்,பணியாளர்கள் யாரும் இல்லாமல் முற்றிலும் தானியங்கி முறையிலான சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது . 

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அமைந்துள்ள துபாய் நகரின் மத்திய கிழக்குப் பகுதியில் , கேஷியர் இல்லாமல்  முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும் 'கேரி போர்' சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது . இங்கு , நொறுக்குத் தீனி, குளிர்பானம் உட்பட அனைத்து பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன . மேலும் , கடை முழுவதும் ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள், சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

 'கேரிபோர் மொபைல் செயலி' வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த தானியங்கி சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

வாடிக்கையாளர்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு கடையின் வாயிலுக்கு வந்ததும், அவர்களுடைய மொபைல் போனுக்கு அவர்கள் எடுத்துள்ள பொருட்களுக்கான பில் வந்து விடும் . பின்னர், வாங்கிய பொருட்களுக்கான தொகையை டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும் .

இது குறித்துப் பேசிய  கேரி போர் நிறுவன தலைமை  அதிகாரி ஹனிஸ் வெய்ஸ் , எதிர்காலத்தில் இதுபோன்ற கேஷியர், பணியாளர்கள் இல்லாத கடைகள் மக்களின் வரவேற்பைப் பெறும் என்று கூறியுள்ளார்.

அமேசான் நிறுவனம் 2018ஆம் ஆண்டு ,  அமெரிக்காவில் இதேபோன்ற ஊழியர்களே இல்லாத தானியங்கி சூப்பர் மார்க்கெட் திறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

;