technology

img

வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்

புதுதில்லி, ஏப்.17- சமூக வலைத்தளங்களிலேயே அதிகமானோரால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்-ஆப்பில் தொடர்ந்து பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது மெட்டா நிறுவனம். இது குறித்து வாட்ஸ்அப்பின் தலைவரான வில் கேத்கார்ட் டிவிட்டர் பதிவில், “முகநூல், இஸ்டாகிராம் போன்றவற்றில் இருப்பது போல, சாட் பாக்ஸில், பயனாளர்கள் தங்களது ரியாக்சனை வெளிப்படுத்தும் எமோஜிகளை அனுப்பும் புதிய வசதி அறிமுகமாகிறது. வாட்ஸ்-ஆப்பில் அனுப்பும் கோப்புகளின் அளவை அதிகரிக்கவும் முன் வந்துள்ளது. தற்போது வெறும் 100 எம்.பி. அளவுள்ள கோப்புகளை மட்டுமே அனுப்ப முடியும். இது இனி இரண்டு ஜிகா பைட்களாக அதிகரிக்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் 32 பேருடன் வாய்ஸ் காலிங் செய்யும் வசதியும் வருகிறது. தற்போது வாய்ஸ் காலிங்கில் வெறும் எட்டுப் பேரை மட்டுமே சேர்க்க முடியும். ஒரு குழுவில் யாராவது ஒரு பயனாளர், சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தகவலை அனுப்பினால் அதனை குரூப் அட்மினே நீக்கக்கூடிய வசதி விரைவில் வரவிருக்கிறது.  ஒரு பயனாளரின் பெயரை நமது கான்டாக்ட் பட்டியலில் சேர்க்காமலேயே, அவருக்கு வாட்ஸ்-ஆப்பில் தகவல் அனுப்பும் வசதியும் வருகிறது. இவையெல்லாம் வரும் வாரத்தில் அப்டேட் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.