tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கருத்தரங்கம்

தமிழ்நாடு மாநிலம் உருவான தினமான  நவம்பர் 1 ஆம் தேதி  மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மதுராந்தகம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில்  ‘அன்னைத் தமிழை அரியணை ஏற்றுவோம்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்குகள் நடைபெற்றன. மதுராந்தகம் தேரடி வீதியில் நடந்த கருத்தரங்கிற்கு வட்டச் செயலாளர் கே.வாசுதேவன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் இ.சங்கர், செய்யூர் பகுதிச் செயலாளர் எஸ். ரவி, மாவட்டக்குழு உறுப்பினர் டி.கிருஷ்ணராஜ்  உட்படபலர் கலந்து கொண்டு பேசினர். செங்கற்பட்டில் கே. சேஷாத்திரி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் உரையாற்றினார். பகுதிச் செயலாளர் எஸ். வேலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.