தபால் காரர்களின் ஓய்வூதியத்தை தாமதிக்காமல் மறு நிர்ணயம் செய்யப்பட்டு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு தலைமை தபால் அலுவலகம் முன்பு செவ்வாயன்று (அக்.15) தர்ணா போராட்டம் நடைபெற்றது.