tamilnadu

img

நூறு நாள் வேலை கேட்டு சாலை மறியல்

மதுராந்தகம், ஆக. 6 - கொளம்பாக்கம் கிராமத்தில் கடந்த 5 வாரங்களாக நூறு நாள்  வேலை தட்டத்தில், பணி வழங்கா ததை கண்டித்து சாலை மறியல் நடை பெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், மது ரந்தகம் வட்டத்திற்குட்பட்ட வையா வூர் ஊராட்சியில் கொளம்பாக்கம், மூசிவாக்கம், பட்டுவாரிநகர், மாம் பட்டு, மலைவையாவுர் ஆகிய 6 கிரா மங்கள் உள்ளன. இதில் கொளம்  பாக்கம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின் றன. இந்த கிராமத்தைச் சார்ந்த  மக்களுக்கு கடந்த 5 வாரங்க ளாக நூறு நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கப்படவில்லை. ஐந்து வாரங்களுக்கு முன்னர்  ஆளும் கட்சி ஒன்றியச் செயலாளர்  அதிமுக கிளை செயலாளரை மட்டுமே பணிதள பொறுப்பாளர் நிய மிக்க வேண்டும் என வட்டார  வளர்ச்சி அலுவலரை நிர்ப் பந்தித்துள்ளார். இதனை கண்டித்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தி வட்டார வளர்ச்சி  அலுவலரை சந்தித்து மனு கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஒருவாரம்  மட்டுமே பணி வழங்கப்பட்ட நிலை யில், அதிமுக ஒன்றியச் செயலாளர் நிர்ப்பந்தத்தால் கடந்த ஐந்து வாரங்க ளாக பணி வழங்கப்படாமல் உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கொளம்பாக்கம் கிராம மக்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் தலைமையில் படா ளம் வேடந்தாங்கல் செல்லும் சாலை யில் மறியலில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்கத்தின் வட்டச்  செயலாளர் எஸ்.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் விதொச மாவட்டத் தலைவர் டி. கோவிந்தன், மதுராந்தகம் வட்டச்  செயலாளர் சசிகுமார், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கலையரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்ட தகவலறிந்து அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலஷ்மி, காவல்துறை துணை  கண்காணிப்பாளர் கந்தன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்  ஒரு வாரத்திற்குள் பணி வழங்குவ தாக உறுதி அளித்தனர்.