tamilnadu

20,000 குடும்பங்களுக்கு ரூ.40 லட்சத்தில் நிவாரணம் சிபிஎம் காஞ்சி-செங்கை மாவட்டச் செயலாளர் இ.சங்கர் தகவல்

செங்கல்பட்டு, மே 28- ஊரடங்கு காலத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 ஆயி ரம் குடும்பங்களுக்கு 40 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டிலான நிவாரண பொருட் கள் வழங்கியுள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இ.சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: கொரானா தொற்று காரணமாக பொதுஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வாழ்வாதாரத்தை இழந் துள்ள மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, வாலிபர், மாதர், மாண வர் அமைப்புகள், தொழிற்சங் கங்கள், விவசாயிகள் சங்கம், மாற்றுத்  திறனாளிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, 30 ஆயிரம் கிலோ அரிசி, மளிகை பொருட்கள், கிருமி நாசினி, மாஸ்க், மருந்து உள்ளிட்ட  40 லட்சம் மதிப்பிலான பொருட்கள்  சேகரிக்கப்பட்டு மாவட்டம் முழுவ தும் உள்ள கட்டுமானம் உள்ளிட்டு முறைசாரா தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், இருளர் இன  மக்கள், தலித் மக்கள், நரிக்குற வர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கைத்தறி நெசவாளர்கள், வடமாநில தொழிலாளர்கள், திருநங்கைகள், சாலையோர வியாபாரிகள் என 20  ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம்  வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு வாலிபர் சங்கம் சார்பில் 103 இளைஞர்கள் ரத்ததானம் செய்துள்ளனர்.

அரசு பரிந்துரை செய்துள்ள ஹோமியோபதி மருந்தான ஆர்சானிக் ஆல்பம் 3சி என்ற மருந்து நான்கு கிராமங்களைச் சேர்ந்த 6 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  மாவட்டம் முழு வதும் பல்வேறு கிராமங்களில் கபசுர  குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. ஊர டங்கு காலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி,  அதன் வர்க்க, வெகுஜன அமைப்பு கள் அர்ப்பணிப்போடு செயல் பட்டுள்ளன. வடமாநில தொழிலாளர்கள் தங்க ளது சொந்த மாநிலங்களுக்குச் செல்ல செங்கல்பட்டிலிருந்து சிறப்பு  ரயில் இயக்கிட மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வலியுறுத்தியதன் பேரில் ஜார்கண்ட், மேற்கு வங்கத்திற்கு இயக்கப்பட்டது.

கூடுதல் பரிசோதனை மையங்கள்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் சென்னையை ஒட்டியிருப்பதால் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் தாலுகா மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும. நோய்த் தொற்று பரிசோதனைகளை அதிகப்படுத்திட வேண்டும், குறிப்பாகச் செங்கல்பட்டு தாம்பரம் உள்ளிட்ட வட்டங்களில் கூடுதல் பரிசோதனை மையங்களை ஏற்படுத்திட வேண்டும்.

நலவாரியம் 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  கைத்தறி நெசவாளர்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்க ளது வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சொந்த மாநிலங்களுக்குச் செல்ல விரும்பும் அனைவரையும் சிறப்பு  ரயில் மூலம் அனுப்ப வேண்டும். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளைச் செய்திட வேண்டும். இருளர் மக்கள் மீது மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி நிவாரணங்களை வழங்க வேண்டும், முறைசாரா நல வாரியங்களில் பதிவு செய்யாதவர்களுக்கும் நிவா ரணம் வழங்க வேண்டும். முறை சாரா நலவாரியங்கள் குறித்து கிராமப்புற மக்கள் அறிந்திராமல் உளளனர். எனவே, எதிர்காலத்தில் நலவாரியங்கள் குறித்து கிராம மக்கள் அறிந்து கொள்ளும் வகை யில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்,

கிருமி நாசினி
செங்கல்பட்டு திருமணியில் செயல்பட்டுவரும் மத்திய அரசு  தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தை  தனியாருக்கு விற்பனை செய்ய இருந்தது. அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், பிரதமரை சந்தித்து அந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்திட வலியுறுத்தி உள்ளார். எனவே, அங்கு கொரோனா  தடுப்பு மருந்து ஆய்வு செய்திடவும்,  கிருமி நாசினிகள் தயாரிக்கவும் மத்திய மாநில அரசுகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

நெல் கொள்முதல் குறித்து விசாரணை
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்  டங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் இரண்டு மாதங்க ளுக்கும் மேலாக நெல் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. மேலும்  விவசாயிகளிடம் நெல் கொள்முதல்  செய்யாமல் தனியார் வியாபாரி களிடம் கொள்முதல் செய்யப்பட்டு முறைகேடுகள் நடந்திருப்பதாகத் தெரிகிறது. இதன் மீது மாவட்ட நிர்வா கம் உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.