tamilnadu

மயானத்திற்கு சாலை வசதி கோரி மனு  

செங்கல்பட்டு,மார்ச் 4- செங்கல்பட்டு மாவட்டம், குமிழி ஊராட்சிக்குட்பட்ட மதுரா இடையர் பாளையம், அருந்ததியர் பாளையம் ஆகிய  கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இவர்களுக்கென தனி மயானம் உள்ளது. ஆனால் மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லை. இந்த கிராமங்களில் யாரேனும் இறந்தால்  தனிநபர் நிலங்களின் வழியாகவே  கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அப்படி செல்லும் போது  தனியார் நிலத்தின் உரிமையாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கடந்த மாதம் 26 ஆம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன் என்பர் உயிரிழந்தார். இவரது உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல தனியார் நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் தனிநபர் நிலத்தின் வேலியை உடைத்து அவரின் உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து காயர் காவல் நிலையத்தில் கிராம மக்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  இந்நிலையில் மயானத்திற்குச் செல்ல நிரந்தர  பாதை அமைத்திட வலியுறுத்தி குமிழி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.