செங்கல்பட்டு, பிப்.3- நெம்மேலி ஊராட்சியில் இருளர் குடியிருப்புக்குச் சாலை வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலி ஊராட்சி, கன்னி யம்மா நகர் இருளர் குடி யிருப்பில் 44 குடும்பங்க ளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி சாலையிலிருந்து இருளர் குடியிருப்புக்குச் செல்ல இணைப்புச் சாலை அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி 15 ஆண்டுகளாக போராட்டங் கள் நடத்தியும் மனு கொடுத்தும் வருகின்றனர். ஆனால் சாலை அமைப்ப தற்கு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஆண்டுகளை கடத்தி வருகின்றனர். இருளர் குடியிருப்புக்கு இணைப்புச் சாலை இல்லாத தால் பள்ளிச் செல்லும் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் என அனை வரும் கடுமையாக பாதிக்கப் படுகின்றனர். மேலும் மழைக் காலங்களில் இவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்படுகிறது. இறந்தவர்க ளின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்வதற்கும் தனி நபரின் நிலத்தினை பயன்படுத்தி வருகின்றனர். எனவே ஊராட்சி சாலையிலிருந்து இருளர் குடியிருப்புக்குச் செல்ல இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இப்பகுதி மக்கள் திங்களன்று (பிப்.3) மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த னர்.