tamilnadu

img

கேட்பாரற்று கிடக்கும் 108 அவசர ஊர்திகள்

செங்கல்பட்டு, ஆக.21-  தமிழகம் முழுவதும் அரசின் சார்பில் இயக்க ப்படும் 108 ஊர்திகளின் பராமரிப்பு மற்றும் தயாரிப்பு செய்யும் பணி காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யப்பட்டுவருகின்றது. இவ்வாறு பழுதாகிப் பயன்படுத்த முடியாமல் போகும் வாகனங்களுக்கு மாற்றாக 83 புதிய வாகனங்கள் கடந்த 3  மாதங்களுக்கு முன் அரசின் சார்பில் வாங்கப்பட்டு வாகனங்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விளை யாட்டுத் திடலில் நிறுத்திவை க்கப்பட்டுள்ளது. இப்படி நிறுத்தப்பட்டு ள்ள வாகனங்கள் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் மழை, வெயிலில் பழு தடைந்து வருகின்றது. மேலும், வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் முட்புதர்கள் வளர்ந்து கிடப்பதால் ஏதோ பழைய வாகனங்கள் போல் காட்சியளிக்கிறது. சமுக விரோதிகள் சிலர் வாகனங்க ளின் உதிரிப் பாகங்களைத் திருடிச் செல்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் க.புருசோத்தமன் கூறுகையில், ‘மருத்து வக்கல்லூரி விளையாட்டுத் திடலில் பாதுகாப்பு இல்லா மல் நிறுத்தி வைக்கப்பட்டு ள்ளதால் 108 அவசர ஊர்தி கள் பழுதாகி வீனாவதுடன், மக்களின் வரிப்பனமும் விரயமாகிறது. எனவே மக்கள் நலன் கருதி வாகன ங்களை வீனடிக்காமல் இயக்க வேண்டும்’ என்றார்.