tamilnadu

img

மனு கொடுத்த அனைவருக்கும் சாதிச்சான்று வழங்குக வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

செங்கல்பட்டு, அக்.22-  மனு கொடுத்துள்ள அனைவருக்கும் சாதிச் சான்று, குடிமனைப் பட்டா வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் செங்க ல்பட்டு கோட்டாட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில்  ஈடுபட்டனர். புறம்போக்கு நிலங்களில் வாழ்ந்துவரும் இருளர் மக்க ளுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்கிட வேண்டும்,  இருளர் மக்கள் அனை வருக்கும் தரமான தொகுப்பு வீடுகளை அரசே கட்டிக்கொடுக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட பல  கோரிக்கைகளை  வலியு றுத்தி  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், இருளர் மக்கள் சங்கம், பழங்குடி மக்கள் விடுதலை இயக்கம், இருளர் முன்னேற்ற நல வாழ்வு சங்கங்கள் சார்பில் செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வா யன்று (அக். 22)  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் சங்கத்தின் நிர்வாகிகள் வட்டாட்சியரிடம் மனு கொடுக்கச் சென்றனர். அப்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் இல்லை. இதனால் ஆவேசமடைந்த இருளர் இன மக்கள் வட்டாட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் சர வணன் சம்பவ இடத்திற்கு வந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். கோரிக்கைகள் மீது விரைந்த நடவடிக்கை எடுப்பதாக தெரி வித்தார். பின்னர் முற்று கைப் போராட்டம் கைவிடப்ப ட்டது. இந்த போராட்டத்திற்கு பழங்குடி மக்கள் விடுதலை இயக்கத்தின் செயலாளர் ராணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், மாவட்டத் தலை வர் அழகேசன், தமிழ்நாடு விவசாயச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மோக னன், விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சண்முகம், இரு ளர் மக்கள் சங்கச் செயலா ளர் பாலாஜி, சிபிஎம் பகுதிச் செயலாளர் கே.வேலன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.