மதுராந்தகம்,மார்ச் 3- பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு அடங்களில் பதிவு செய்திடவும், குடிமனை பட்டா வழங்கப்படாதவர்களுக்கு அர சாணை 318ஐ பயன்படுத்தி உடனடியாக குடி மனை பட்டா வழங்கிட வலியுறுத்தியும் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வேடந்தாங்கல் கிராம நிர்வாக அலுவல கத்தில் செவ்வாயன்று (மார்ச் 3) விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வி.திருமலை தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ஜி.மோகனன், வட்டச் செயலாளர் எஸ்.ராஜா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் கே.வாசுதேவன் ஆகியோர் பங்கேற்றனர். போராட்டத்தை நிறைவு செய்து விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேரு பேசினார். முன்னதாக தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் வட்டாட்சியர் வேல்முருகன் சங்கத்தின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டார். இதில் குடிமனை பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு அடங்களில் பதிவேற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும், புதியதாகக் குடிமனை பட்டா வழங்கிட நில அளவையர்கள் மூலம் உடனடியாக இடம் அளவீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பிவைத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித் தார். இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.