tamilnadu

img

மாமல்லபுரத்தில் முதலமைச்சர் ஆய்வு

மாமல்லபுரம், அக்.2-  இந்திய  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் பல்வேறு ஒப்பந்தகள் குறித்து  பேச்சு நடத்துவ தற்காக அக்டோபர் 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை மாமல்லபுரம் வருகின்ற னர். இதனால், கோவளம் முதல் கல்பாக்கம் வரை யில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளன.  இது குறித்து  முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர்  புதனன்று (அக்.1) மாமல்ல புரத்தில் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, அர்ஜூனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட கலைச் சின்னங்களை பார்வை யிட்டு, அப்பகுதிகளில் நடை பெற்று வரும் பணிகளை, துரி தப்படுத்துமாறு அதிகாரிக ளிடம் கூறினர். மேலும், நகரப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு கட்டமைப்புகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுப்பட்ட னர்.