செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் காவல் துறை சார்பில் ‘சாலை பாதுகாப்பு’ குறித்த காணொளி வாகனம் மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதன் துவக்க நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளர் சரவணன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியை லயன்ஸ் கிளப் சங்கம் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்தியது.