tamilnadu

img

ஆக.5 வரை ஜம்மு-காஷ்மீரில் ஊரடங்கு கட்டுப்பாடு நீட்டிப்பு....

ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால்  கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறையாததால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நீட்டித்து ஜம்மு-காஷ்மீர் அரசு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 20,972 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  613 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

;