tamilnadu

img

அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு  சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்தூர்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் மற்றும் போக்குவரத்து கிளையில் பணிபுரியக்கூடிய டிக்கெட் கேன்வாஸர்கள், பஸ் பாடி கிளீனர்கள் ,தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட எட்டு நபர்கள் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தனர். கொரனோ ஊரடங்கை ஒட்டி பணியில்லாததால் அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு அரிசி மற்றும் பலசரக்கு உள்ளிட்ட நிவாரண பொருட்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் அமைப்பின் மாவட்ட செயலாளர் தங்கப்பழம் கிளைமுன்பாக வழங்கினார். நிகழ்வில்கிளை தலைவர் தங்கமாரி, கிளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிளை பொருளாளர் நாகப்பன் உட்படஉறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

;