வேலூர், ஜூன் 22- சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைச் சமா ளிக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் தண்ணீர் கொண்டுவரப்படும் என்றும் இதற்காக ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறி வித்திருந்தார். இதற்கு திமுக பொருளாளர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வேலூரில் இருந்து ரயிலில் சென்னைக்கு தண்ணீர் கொண்டு சென்றால் மாவட்ட நிர்வாகிகளை திரட்டி பெரிய அள வில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்ச ரித்திருந்தார். இந்நிலையில் துரைமுருக னின் எதிர்ப்பைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.சி.வீரமணி, எஸ்.பி. வேலுமணி ஆகி யோர் பதிலளித்துள்ளனர். இதுகுறித்து வேலூரில் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி யில், சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டு செல்வதால் ஜோலார்பேட்டைக்கு எந்த பாதிப்பும் வராது. கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கும் உபரிநீர் தான் எடுத்துச் செல்லப்படுகிறது. தண்ணீர் பிரச்சனை தொடர்பாக திமுக கூறுவதில் உண்மை யில்லை என்றார். இதுகுறித்து கோவையில் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகை யில், “சென்னை நீர் பற்றாக்குறையை போக்கவே வேலூரில் இருந்து ரயில் மூலம் நீர் கொண்டுவரப்படுகிறது. சென்னைக்கு நீர் கொண்டுவருவதன் மூலம் வேலூருக்கு அளிக்கும் நீரின் அளவு குறைக்கப்படாது. ஜோலார்பேட்டையில் இருந்து நீர் கொண்டு வருவதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்’’என்றார்.