கவுண்டன்ய ஆற்றின் குறுக்கே மூங்கில் பாலத்திற்கு பதிலாக தரைப்பாலம் அமைக்க வேண்டும், ஜங்கலப்பல்லி, மீனூர் கொல்லைமேடு குறுக்கே பாலம் கட்ட வேண்டும், ஏரிப்பட்டரை கானாற்றை தூர் வார வேண்டும், சேம்பள்ளி கூட்டுசாலையிலிருந்து, சேம்பள்ளி சாலையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் அக்ராவரம் கிராமத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தாலுக்கா செயலாளர் கே.சாமிநாதன், பி.காத்தவராயன், பி.குணசேகரன், சி.சரவணன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.