வேலூர், ஆக. 17- வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிப்பது தொடர் பாக, பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் வரும் 28ஆம் தேதி திருப்பத் தூரிலும், 29ஆம் தேதி ராணிப்பேட்டையிலும் நடை பெற உள்ளது. இவற்றில் தமி ழக அரசின் வருவாய் ஆணை யர் பங்கேற்று பொதுமக்க ளிடம் கருத்து கேட்பார் என ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். தமிழகத்திலேயே மிக அதிக பரப்பளவு கொண்ட மாவட்டமாக வேலூர் மாவட்டம் உள்ளது. இம் மாவட்டத்தின் ஒருபகுதி யான திருப்பத்தூரில் இருந்து வேலூருக்கு வர 120 கி.மீ தூரமும், மற்றொரு பகுதியான அரக்கோணத்தி லிருந்து வேலூருக்கு வர 100 கி.மீ தூரமும் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால், அரசுப் பணிகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவல கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தலைமை அலுவலகங்களுக்கு வந்து செல்ல பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வரு கின்றனர். இதையடுத்து பொது மக்களின் நலனைக் கருத் தில் கொண்டும், அரசுப் பணி களை எளிமைப்படுத்தவும் வேலூர் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை யில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, வேலூர் மாவட் டத்தை வேலூர், திருப்பத் தூர், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்படும் என்று அறி வித்தார். வேலூர் மாவட்டத் தில் 13 பேரவைத் தொகுதி களுக்கு உள்பட்டுத்தான் மாவட்டத்தைப் பிரித்துள்ள னர். இங்குள்ள ஒரு பகு தியை அருகிலுள்ள மாவட் டத்திலோ அல்லது அருகே உள்ள மாவட்டத்தின் ஒரு பகுதியை வேலூர் மாவட்டத் திலோ இணைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.