tamilnadu

வேலூர் முக்கிய செய்திகள்

மனித உரிமை மீறல்: காவல்துறை ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

வேலூர், அக்.17- மனித உரிமை மீறல் தொடர்பான இருவேறு  வழக்குகளில் காவல் ஆய்வாளருக்கு தலா ரூ.  25 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித  உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம், முள்ளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அனுசுயா என்பவர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், “எனது மகன் ரவீந்தரனை பொய் வழக்கில் வேலூர் தாலூகா காவல்துறையினர் கடந்த  2012-ல் கைது செய்து சிறையில் அடைத்த னர். இதைத் தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் நானும், எனது மகளும் வீட்டில்  இருந்தோம். அப்போது, அங்கு வந்த வேலூர்  தாலூகா காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன், என்னையும், எனது மகளையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். மனித உரிமை மீறலில் ஈடுபட்ட ஆய்வாளார் ராமச்சந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும்,” என தெரிவித்திருந்தார். அதேபோல், அனுசுயாவின் சகோதரி உஷா அளித்த மனுவில், நில விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ராமச்சந்தி ரன் தன்னைத் தாக்கியதுடன், ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள விவசாயக் கருவிகளையும் பறித்துக் கொண்டார்” என கூறியிருந்தார்.  இந்த இரு மனுக்களை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை. ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், “காவல் ஆய்வாளர் ராமச்சந்திரனுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்தத் தொகையை அவரது ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து மனுதாரர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும்,” என தமி ழக அரசுக்குப் பரிந்துரைத்தார்.

சுகாதாரமான குடிநீர் கிடைப்பது சவாலாக உள்ளது: வேலூர் ஆட்சியர்

வேலூர், அக்.17- அறிவியல் தொழில்நுட் பம் வளர்ச்சி கண்டுள்ள நிலையில் சுகாதாரமான குடி நீர் கிடைப்பது சவாலாக உள்ளது என்று உலக கை கழுவும் தின விழிப்புணர்வு விழாவில் ஆட்சியர் சண் முகசுந்தரம் பேசினார்.  அக்டோபர் 15 ஆம் தேதி  ஒவ்வொரு ஆண்டும் உலக  கை கழுவும் விழிப்புணர்வு  தினமாக கடைபிடிக்கப்படு கிறது. அதன்படி, வேலூர் அர சினர் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில், நடந்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சிக்கு சுகா தாரப் பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தலைமை  தாங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் மார்ஸ் முன்னிலை வகித்  தார். ஆட்சியர் சண்முக சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகை யில், “முன்னோர்கள் பின் பற்றி வாழ்ந்த சுகாதாரமான உணவுப் பழக்கத்தை மறந்து விட்டோம். இதனால்  குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை அலர்ஜி, குடல் புழு உள்ளிட்ட உடல் பாதிப்புகள் ஏற்படுகிறது". இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக அவர், மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் பேசினார். பின்னர் பள்ளிக்கல்வித்துறை சார் பில் நடந்த அறிவியல் கண்காட்சியை ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வை யிட்டார். இதில், அரசு, தனி யார் பள்ளி மாணவ, மாணவி கள் கலந்து கொண்டு, சோலார் வாட்டர் `ஹீட்டர்,  சொட்டுநீர் பாசன விவசா யம், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம், இயந்திர மனி தன், நிலநடுக்கம் எச்சரிக்கை  ஒலி எழுப்பும் கருவி உட்பட  பல்வேறு கண்டுபிடிப்பு களை காட்சிப்படுத்தி இருந்தனர்.