tamilnadu

வேலூர், சிதம்பரம்,புதுச்சேரி,திருவண்ணாமலை முக்கிய செய்திகள்

சகஜானந்தா பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட கோரிக்கை
சிதம்பரம்,செப்.19-சுவாமி சகஜானந்தா மணிமண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா தமிழக முதல்வருக்கு மனு ஒன்றை அனுப்பி யுள்ளார். அதில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 100 ஆண்டு களுக்கு முன் ஏழை மக்களுக்கு கல்வியால் புரட்சி ஏற்ப டுத்திய சுவாமி சகஜானந்தாவுக்கு தமிழக அரசு சார்பில்  அவர் வாழ்ந்த இடத்தில் மணிமண்டபம் அமைக்கப் பட்டுள்ளது. இதனை அனைத்து தரப்பு மக்களும் வர வேற்றுள்ளனர். அவரது பிறந்தநாள் ஜனவரி 27 ஆம் தேதி மற்றும் மே 1 ஆம் தேதி குரு பூசை நிகழ்ச்சிகளை அரசு நிகழ்ச்சியாக நடத்த  வேண்டும். சட்டமன்ற தந்தை என்று போற்றப்பட்ட அவரது உருவபடத்தை தமிழக சட்டப்பேரவையில் வைக்க வேண்டும்.  வரும் மே 1 ஆம் தேதி நடைபெறும் குருபூசையில் தமிழக முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

புதுவையில் லாரிகள் ஓடவில்லை
புதுச்சேரி, செப். 19-புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  புதுச்சேரியில் லாரிகள் ஓடவில்லை. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன  சட்டத்தில் அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு  தெரிவித்து அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அறிவிப்பின்படி புதுச்சேரியில் வியாழன்று (செப்.19) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள்  வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.  இப்போராட்டத்தில் புதுச்சேரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படாமல் லாரி ஷெட்களிலும், சாலை ஓரங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

100 நாள் வேலையில் முறைகேடு: பொறுப்பாளர்களுக்கு அபராதம்
வேலூர், செப். 19- வேலூர் மாவட்டம் ஊசூர், ஊராட்சியில் நிதி முறை கேடு செய்த நூறு நாள் திட்ட பொறுப்பாளர்களுக்கு ரூ. 8ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அணைக்கட்டு தாலுகா ஊசூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் 12 லட்சத்தில் நீர் உறிஞ்சி கிணறு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு  பணிகள் நடந்துவருகிறது. இதில் 2018-2019 ஆம் நிதி ஆண்டின்  சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது. சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வள அலுவ லர் சிவகாமி. களப்பணியாளர்கள் வெண்மதி, சத்யா ஆகி யோர் தணிக்கை செய்தனர்.அப்போது, தொடர்ச்சியாக பணி  வழங்க வேண்டும் உள்ளிட்ட பணியாளர்களின் கோரிக்கை கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என அலுவலர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, நூறு நாள் வேலை திட்டப்பணிகள் குறித்து சமூக தணிக்கை செய்ததில் பணியாளர்கள் வருகை பதி வேட்டில் ஒயிட்னர் பயன்படுத்தி திருத்தம் செய்து, நிதி முறை கேடு செய்ததற்காக திட்டப் பொறுப்பாளர்களுக்கு ரூ.8,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கல்லூரி மாணவி தீயில் எரிந்து பலி
திருவண்ணாமலை,செப்.19- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கோதண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகள் சுமித்ரா (21). வந்தவாசியில் உள்ள ஒரு தனியார்  கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்த இவருக்கு கடந்த  6 மாதங்களாக உடல்நல குறைவு ஏற்பட்டதாக கூறப்படு கிறது. இதனால் கல்லூரி படிப்பை தொடர முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதன் அன்று வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்த போது திடீரென சுமித்ரா மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு அறையில் தீ வைத்துக் கொண்டதாகவும், சுமித்ரா வின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர்கள் கண்விழித்து பார்த்த போது சம்பவ இடத்திலேயே தீயில் கருகி அவர் உயிரிழந்த தாக தெரியவருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வடவணக்கம்பாடி காவல்  துறையினர், மாணவியின் பிணத்தை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி  மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி  வருகின்றனர்.