tamilnadu

பழமையான பஞ்சலோக சிலையை திருடிய 3 பேர் கைது

 வேலூர், மே 6-  ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே 84 வரு டங்கள் பழமையான ஐம்பொன் சிலை கொள்ளை யடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்  பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆற்காடு அருகே கானார் பஜனை வீதியில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் 30 கிலோ எடையும், மூன்றே முக்கால்  அடி உயரமும் கொண்ட பஞ்சலோக கிருஷ்ணர் சிலை கடந்த ஜனவரி மாதம் திருடு போனது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையே சிலை திருடு  போன 2 நாட்களில் கை உடைந்த நிலையில் அந்த சிலை மீட்கப்  பட்டது. இந்நிலையில், ஆற்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சிலையின் கைகளை எடுக்க வந்த அஜீத், தீபன், ஜெயக்குமார்  ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.