tamilnadu

திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் குறைப்பு

வேலூர்,செப்.24- வேலூர் மாவட்டம் திரு வலத்தை அடுத்த சேர்க்காட்டில் அமைந்துள்ள வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திரு வண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட அரசு, அரசு நிதி உதவி மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், பல்கலை க்கழக பருவத் தேர்வுக் கட்ட ணங்களை அண்மையில் பல்கலைக்கழக நிர்வாகம் உயர்த்தியது. இதைக் கண்டித்து அரசு கலை, அறிவியல் கல்லூரி மாண வர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக திரு வள்ளுவர் பல்கலைக் கழ கத்தை முற்றுகையிட்டனர். மாணவர்கள் போராட்ட த்தின் எதிரொலியாக திரு வள்ளுவர் பல்கலைக்கழக  பருவத் தேர்வுக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.  இளநிலை வகுப்புக ளுக்கான அனைத்து பாடப் பிரிவுகளுக்குமான எழுத்துத் தேர்வுகளுக்கு தாள் ஒன்றுக்கு ரூ. 100 வசூ லிக்கப்பட்ட தேர்வுக் கட்ட ணம் ரூ.90 ஆகவும், முதுநிலை வகுப்பு களுக்கான அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கான எழுத்துத் தேர்வுகளுக்கு தாள் ஒன்றுக்கு ரூ.160 என வசூலிக்கப்பட்ட கட்டண மானது ரூ. 145 ஆகவும், எம்சிஏ, எம்பிஏ, எம்எஸ்சி ஐடி, எம்எஸ்சி சிஎஸ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு தாள் ஒன்றுக்கு ரூ. 500 வசூலிக்கப்பட்ட கட்டண மானது இனி ரூ.450 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.  அதேபோல், இளநிலை வகுப்புகளுக்கான அனைத்துப் பாடப்பிரிவு களுக்கான 3 மணி நேர செய்முறைத் தேர்வுகளுக்கு ரூ.175-இல் இருந்து ரூ. 150 ஆகவும், இளநிலை வகுப்புகளுக்கான அனை த்துப் பாடப்பிரிவுகளுக்கான 6 மணி நேர செய்முறைத் தேர்வுகளுக்கு ரூ. 350-இல் இருந்து ரூ. 300 ஆகவும், எம்ஏ, எம்எஸ்சி, எம்பிஏ உள்ளிட்ட முதுநிலை வகுப்பு களுக்கான அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கான 3 மணி நேர செய்முறைத் தேர்வுகளுக்கு ரூ. 300-இல் இருந்து ரூ. 275 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதா கவும், மேற்கூறிய தேர்வுக் கட்டணங்கள் வரும் 27 ஆம் தேதி வரை அபராதம் இன்றி செலுத்த அனு மதியளிக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டு ள்ளது.