tamilnadu

img

வேலூர் தேர்தல் முடிந்தது 63 சதவீதம் வாக்குப்பதிவு

 வேலூர், ஆக.5- வேலூர் மக்களவை தொகு திக்கு நடந்த தேர்தலில் காலை  7 மணி முதல் உணவு இடை வேளையின்றி மாலை 6 மணி வரை நடைபெற்றது. வேலூர் மக்களவைத் தொகு தியில் மதச் சார்பற்ற முற்போக்கு  கூட்டணி சார்பில் திமுக வேட்பா ளர் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம் என மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிடும் வேலூர் மக்கள வைத் தொகுதிக்கு திங்களன்று (ஆக.5) தேர்தல் நடைபெற்றது. ஆயிரத்து 600 துணை ராணு வத்தினரும், 5 ஆயிரம் போலீசா ரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடு பட்டுள்ளனர். தேர்தலை முன் னிட்டு வேலூர் மக்களவைத் தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. காலை 7  மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி யது வாக்காளர்கள் வந்து வாக்கினைப் பதிவு செய்தனர்.

காலையில் பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு மந்த மாக இருந்தது. ஆம்பூர் இந்திரா நகர் இந்து மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் காலை 7.50 மணி வரை ஒரு வாக்கு கூட பதி வாகவில்லை. அதன் பிறகு தான்  வாக்குகள் பதிவாகின. இதேபோல் தோட்டப்பாளை யம், சத்துவாச்சாரி, வள்ளலார் நகர், காகித பட்டறை உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு மந்த மாக இருந்தது. வேலூர் சார்ப்பனா மேட்டில் 68ஆவது எண் வாக்குச் சாவடியில் விவிபேட் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. வேலூர் பொதுப் பணித் துறை அலுவலகத்தில் அமைக்  கப்பட்டிருந்த வாக்குச்சாவடி யில் அம்மாவட்ட ஆட்சியர் சண்  முகசுந்தரம் வாக்களித்தார். வாக்குப்பதிவு மந்தம் தொடர் பாக விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், பருவ நிலை மாற்றத்தை காரணமாகக் கூறினார். 

வேலூர் மக்களவைத் தேர்  தல் வாக்குப்பதிவை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொ லிக் காட்சி வாயிலாக தமிழக தேர்  தல் அதிகாரி சத்யபிரதா சாகு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனிடையே காலை 11 மணி  நிலவரப்படி வேலூர் தொகுதியில் 14 புள்ளி 6 விழுக்காடு வாக்கு கள் பதிவாகி உள்ளதாக அறி விக்கப்பட்டுள்ளது. வாணி யம்பாடியில் உள்ள 73ஆவது வாக்குசாவடியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் வாக்களித்தார். வாக்குப் பதிவு நிலவரம் குறித்து அதிகாரிகள் 2 மணி  நேரத்துக்கு ஒருமுறை வெளி யிட்டு வந்தனர். அதன்படி காலை  9 மணி வரை  7.40 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.  சட்டமன்ற தொகுதி வாரியாக  பிற்பகல் ஒரு மணி வரைக்கும் வேலூரில் 29.73 சதவீதம், அணைக்கட்டு 27.14 சதவீதம், கே.வி.குப்பம் 30.75 சதவீதம், குடி யாத்தம் 32.43 சதவீதம், வாணியம்  பாடி 30.21 சதவீதம், ஆம்பூர் 31.48  சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. மாலை 5 மணி நிலவரப்படி 63 விழுக்காடு வாக்குகள் பதிவானது.