வேலூர் ஜூன்.23- தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் தமிழ்தெரியாத வட மாநிலத் தவர்களை நியமிப்பதைக் கண்டித்து அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கம், வியாபாரிகள் சங்கம், எஸ்சி, எஸ்டி கூட்டமைப்பினர், தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரக்கோணம் ரயில் நிலைய நுழைவு வாயில் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு ரயில் பயணிகள் சங்கத் தலைவர் நைனா மாசிலாமணி தலைமை வகித்தார். நகர மளிகை வியாபாரிகள் சங்கச் செயலர் ஜி.டி.என்.அசோகன் வரவேற்றார். இதில் ரயில் பயணிகள் சங்க பொதுச் செயலர் ரகுநாதன், சங்க நிர்வாகிகள் முனிபிரசாத், ராஜேந்திரன், தமிழ்நாடு வணிகர் சங்கக் கூட்டமைப்பின் வேலூர் மாவட்டத் தலை வர் கே.எம்.தேவராஜ், தமிழ் படைப்பாள ர்கள் சங்க நிர்வாகி சுந்தர், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் மாவட்டச் செயலர் கௌத மன், ஜனதா கட்சி மாநில நிர்வாகி சிவசுப்பிர மணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர நிர்வாகி ஏ.பி.எம்.சீனிவாசன், வணிகர் சங்க நிர்வாகி இன்பநாதன், அரசு ஊழியர் சங்க அரக்கோணம் கிளைத் தலைவர் பார்த்தீபன், காங்கிரஸ் நகரச் செயலர் சாமிதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.