திருவள்ளுவர் பல்கலைக் கழக தேர்வுக் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் மாரியப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீபத், மாவட்ட நிர்வாகிகள் பிரகாஷ், முத்துச் செல்வம், விஜய், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.