சென்னை, செப். 6- சென்னை பல்கலைக்கழகத்தில் ஆளுந ரின் வற்புறுத்தலால் மாணவர் நீக்கப்பட்ட தற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:- சென்னை பல்கலைக்கழக இதழியல் துறையில் மாணவர் கிருபாமோகன், பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் என்னும் அமைப்பில் இணைந்து சமூகப் பிரச்சனை களுக்காக போராடி உள்ளார். எனவே இந்துத்துவா சனாதன சங் பரிவார் கும்பல் மாணவர் கிருபாமோகன் மீது காழ்ப்பு ணர்ச்சி கொண்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் அழுத்தம் கொடுத்து, பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கி உள்ளனர்.
‘பெரியார், அம்பேத்கர் பெயரைக் கேட்டாலே ஒவ்வாமை’ கொண்டிருக்கின்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இந்துத்துவா சனாதன சக்திகளின் கோரிக்கையை ஏற்று, மாணவர் கிருபா மோகனை பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றியிருப்பது கடும் கண்ட னத்துக்கு உரியது. தமிழக ஆளுநரின் ஏதேச்சதிகார ஆண வப்போக்கிற்கு அடிபணிந்து, மாணவர் கிருபாமோகனை நீக்கி இருப்பதற்கு சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இதுபோன்ற மிரட்டல்கள் மூலம் தந்தை பெரியார் அம்பேத்கர் சிந்தனைகளை மாண வர்கள் உள்ளங்களிலிருந்து துடைத்து எறிந்து விடலாம் என்று தமிழக ஆளுநரும், துணைவேந்தரும் நினைப்பது ஒருபோதும் நிறைவேறாது. மாணவர் கிருபாமோகன் மீதான நடவ டிக்கையை சென்னைப் பல்கலைக்கழகம் உடனடியாக திரும்பப் பெற்றுக் கொண்டு, அவர் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும். இல்லையேல் மிகக் கடுமை யான போராட்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என்று எச்சரிக்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.