tamilnadu

img

வேலூர் சிறையில் 8ஆவது நாளாக முருகன் உண்ணாநிலை

வேலூர்:
வேலூர் சிறையில் 8 ஆவது நாளாக உண்ணாநிலை போராட்டத்தில் இருந்து வரும் முருகனின் உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் அவருடைய மனைவி நளினி ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

15 நாட்களுக்கு ஒருமுறை இருவரும் சந்திக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக இருவரும் சந்திக்க முடியவில்லை. நளினி, முருகன் இருவரும் காணொளி மூலம் பேச அனுமதிக்குமாறு சிறை நிர்வாகத்துக்கு முருகன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனால் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. இதனால் மனவேதனையில் இருந்த முருகன் கடந்த 1ஆம் தேதி முதல் சிறையில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். திங்களன்று 8 ஆவது நாளாக முருகன்உண்ணாநிலையை மேற்கொண்டு அவரது உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

;