வேலூர்,செப்.21- வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு ஆட்சியர் அ.சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எல்.சி.மணி பேசுகை யில்,“ஆவின் பால் உள்ளூர் வாகனம் மூலம் விநியோகிக்கப்படுகிறது. கடந்த ஒரு மாத மாக காலதாமதமாக வருவதால் ஆந்திர மாநில தனியார் பால் விற்பனைக்கு, ஆவின் பால் நிர்வாகம் துணை போகிறது” என்று குற்றம் சாட்டினார். ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள், குடிநீர் தொட்டி இயக்கு நர்கள், மற்றும் இ-சேவை மையத்தில் பணி யாற்றுபவர்களுக்கு, மிகக்குறைவாகவே ஊதிய வழங்கப்படு கிறது. இதன் மூலம் ஊழி யர்களை அரசே கொத்தடிமையாக நடத்து கிறது. கேரள அரசைப்போன்ற ரூ.18,000 வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். வேலூர் 2 முறை வறட்சி மாவட்டமாக அறி விக்கப்பட்டும் இதுவரை விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கிடைக்கவில்லை. விவ சாயிகளுக்கான மானியமும் கிடைக்க வில்லை என்று விவசாயி ஒருவர் வேதனை யோடு கூறினார். பொன்னையாற்றில் பல்லேரி - கோட்ட நத்தம் இடையே தடுப்பணைக்கட்ட ரூ. 6.73 கோடி ஒதுக்கீடு செய்ததாக சில ஆண்டு களுக்கு முன்பு அதிகாரிகள் தரப்பில் தெரி வித்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அப்பகுதியில் தடுப்ப ணைக் கட்ட மாவட்ட நிர்வாகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த ஆட்சியர் சண்முக சுந்தரம், “தடுப்பணைகள் கட்டும் போது விவ சாயிகளிடம் கருத்து கேட்டு தேவையான இடங்களில் கட்டப்படும்” என்றார்.