tamilnadu

img

ஜூடோ கே.கே.ரத்தினத்திற்கு வயது 91: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

வேலூர், ஆக. 10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்ட ருமான  ஜூடோ கே.கே.ரத்தினம் ஞாயி றன்று (ஆக.9) 91வது வயதில் அடி யெடுத்து வைத்தார். ஏழை கைத்தறி நெசவாளர் குடும்  பத்தில் பிறந்த ரத்தினம், ஒன்றுபட்ட அன்றைய வட ஆற்காடு மாவட்டத்தில்  அடக்குமுறை காலத்தில் கம்யூனிஸ்ட்  கட்சித் தலைவர்கள் வி.கே. கோதண்ட ராமன், மருத்துவர் கண்ணபிரான், பா.முனு சாமி ஆகியோருக்கு உதவி செய்ய வந்தவர் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டார். குடும்ப வறுமை காரணமாகத் திரு மகள் நூற்பாலையில்  தொழிலாளர்களைத் திரட்டி போராடியதால் செங்கொடி சங்கம் 100க்கு 99 சதவிகித வாக்குகளைப் பெற்று, நிர்வாகத்தின் ஆதரவு சங்கத்தை  மண்ணை கவ்வச் செய்து தலைவரா னார். அவர்தான் கே.கே.ரத்தினம். அவரது  போராட்டத்தால் ஆலைத் தொழிலாளர்கள்  கேண்டீனில் குறைந்த விலையில் தரமான உணவை வயிறாரச் சாப்பிட்டார்கள். குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்ட  காமராஜரின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சண்முக முதலியார்தான் அந்த  ஆலையின் உரிமையாளர். அவர் கோப மடைந்து 1958ஆம் ஆண்டு தோழர் கே.கே. ரத்தினத்தை வேலையிலிருந்து நீக்கினார். aபின்னர் திரைத்துறையில் காலடி  எடுத்து வைத்த ரத்தினம் தனது அபார  திறமையால் அங்கும் ஒரு ‘கம்யூ னிஸ்ட்டாக’ வெற்றிக் கொடி நாட்டினார். பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்ட ராக பணியாற்றினார். இதனால் அவர் பின்னாளில் 'ருத்ரநாகம்’ ஜூடோ ரத்தி னம் என்று திரையுலகினரால் அழைக்கப் பட்டார். கடந்த 70 ஆண்டு காலமாக கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினராக உள்ள அவ ரது இல்லத்தில் எப்போதும் செங்கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது. 91 ஆவது பிறந்த நாள் காணும் தோழ ருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  வேலூர் மாவட்டக்குழு சார்பில் மாவட்டச்  செயலாளர் எஸ்.தயாநிதி உள்ளிட் டோர் வாழ்த்துக்களைத் தெரி வித்தனர்.