tamilnadu

img

தனியாருக்கு தாரை வார்க்காதே...

பாதுகாப்பு பிரிவில் முன்னாள் ராணுவத்தினரை ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்துவதை கண்டித்தும், 30 வருட சர்வீஸ் அல்லது 55 வயது நிறைவடைந்து கட்டாய ஓய்வில் அனுப்பும் முடிவை கைவிட வலியுறுத்தியும் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் வேலூர் முதுநிலை பொறியாளர் அலுவலகம் முன்பு ஏழுமலை தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.பி. ராமச்சந்திரன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஜி.நரசிம்மன், சி.எஸ்.மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்த கொண்டனர்.

**********

வேலைகேட்டு பேரணியாக சென்றவர்கள் மீது மேற்குவங்க மம்தா அரசின் காவல்துறை  நடத்திய  தாக்குதலை கண்டித்து கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாவட்டச் செயலாளர் டி.கிருஷ்ணன், பொருளாளர் ஆர்.கலைச்செல்வன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில்  ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 

************

வேலைகேட்டு பேரணியாக சென்றவர்கள் மீது மேற்குவங்க மம்தா அரசின் காவல்துறை  நடத்திய  தாக்குதலை கண்டித்து   புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில்  ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.  இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேசத் தலைவர் ஜெயபிரகாஷ், மாணவர் பெருமன்ற தலைவர் முரளி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேசத் தலைவர் ஆனந்து, செயலாளர் சரவணன், இளைஞர் பெருமன்ற தலைவர் ராமராஜ், செயலாளர் அந்தோனி உட்பட திரளான வாலிபர்கள் மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.