tamilnadu

img

நகை திருடிய தனியார் கல்லூரி முதல்வர் கைது

ஆம்பூர் அருகே பூட்டிய வீட்டில் 5 சவரன் நகையை திருடிய பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நரியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மோகன் அவர் அப்பகுதியில் தேநீர் மற்றும் குளிர்பானக்கடை நடத்தி வருகிறார். இவர் வியாழனன்று வீட்டை பூட்டி விட்டு கடைக்குச் சென்றுள்ளார். சிறுது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த போது வீடு கதவு திறந்து வீட்டில் இருந்த 5 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது கல்வி நிறுவனம் ஒன்றைச்சேர்ந்தவர்கள் துண்டு பிரசுரம் வழங்க வீடு வீடாக வந்து சென்றனர் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மோகன் அப்பகுதியில் உள்ள தெருக்களில் தேடிப்பார்த்தார். அப்போது அங்கு துண்டு பிரசுரம் விநியோகித்த ஒருவர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து மோகன் அவரைப்பிடித்து உமர் ஆபாத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதையடுத்து காவல் துறையினர் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் ஜிஎஸ்எஸ்ஆர் தொழில்நுட்பம் மற்றும் செவிலியர் கல்வி நிறுவனத்தில் முதல்வராக பணியாற்றும் ரஜினேஷ் என்பது தெரியவந்தது. 


;