நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்சானிக் ஆல்பம் 30 ஹோமியோபதி மருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட குழு சார்பில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மருத்துவர் வி.முரளி, மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, செயற்குழு உறுப்பினர்கள் எம்.பி.ராமச்சந்திரன், எஸ்.டி.சங்கரி, செ.ஏகலைவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.