வேலூர், ஜூன் 26- வேலூர் அருங்காட்சியகத்தில் நாண யங்கள், கல்வெட்டுகள், பண்டைய கால வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு தொகுப்புகள் அடங்கிய தமிழ் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என்று அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் தெரிவித்தார். தமிழ்நாட்டு நாணயங்கள், அருங்காட்சி யக வியல் கலைச்சொற்கள், கலைப்பொருட் கள் பாதுகாப்பு, பழங்கால பண்பாடும், பழங்குடிகள் பண்பாடும், மருத்துவத்தாவ ரங்கள், கல்வெட்டுகள் போன்றவற்றின் வர லாறுகள் அடங்கிய தொகுப்பு நூல்கள் முன்பு பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருந்தது. இதனால் அதனை தமிழகத்தில் உள்ள வர்கள் முழுமையாக படித்து தெரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்போது மேற்கண்ட அரிய வகை நூல்களின் தமிழ் தொகுப்பு அருங் காட்சியகம் சார்பில் அச்சிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மாநிலம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களில் விற்பனை செய்ய அருங்காட்சியக இயக்குனர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாநி லம் முழுவதும் அரிய வகை நூல்கள் விற் பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 21 அருங்காட்சி யகங்களில் நாணயங்கள், பழங்கால பண் பாடுகள், கல்வெட்டுகளின் தமிழ் தொகுப்பு நூல்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.