அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் வேலூர் கோட்டத்தின் 32 ஆவது மாநாடு வாணியம்பாடியில் சனிக்கிழமையன்று (செப்.14) துவங்கியது. முன்னதாக வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள எல்ஐசி அலுவலத்தில் இருந்து துவங்கிய பேரணியை தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொருளாளர் எஸ். சிவசுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பொதுமாநாடு நடைபெற்றது. இம்மாநாடு ஞாயிறன்று (செப்.15) நிறைவடைகிறது.