வேலூர், செப்.30- வேலூர் மாவட்டம் வாழைப் பந்தல், சொரையூர், ஆரூர், பொன்னம்பலம், மேல் புதுபாக்கம், மாம்பாக்கம், ஆகிய ஏரிகளின் வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும், ஏரி, குளம், நீர்நிலைகளை தூர் வார வேண்டும், மேலப்பழந்தைக்கு நேரடி கால்வாயான, புதுப்பேட்டை அணை யிலிருந்து நாகாந்தி கால்வாய் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி விவசாயிகள் சங்க மும், விவசாயிகள் தொழிலாளர் சங்க மும் இணைந்து (செப்.30) வாழைப் பந்தல் கிராமத்திலிருந்து துவங்கி கலவை கிராமம் வரை 17 கி.மீ தூரம், நடைபயணம் மேற்கொண்டு பொதுப் பணித்துறை அலுவலகம் அருகே முடித்துக்கொண்டனர். அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநிலச் செயலாளர் எஸ். துளசி நாராயணன், மாவட்டச் செயலாளர் ப.சக்திவேல், விதொச. மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுபதி, மாவட்டத் தலைவர் எல்.சி.மணி, உள் ளிட்ட ஏராளமானோர் உரையாற்றினர்.