tamilnadu

img

ஹிரோஷிமா அணுகுண்டை விட சக்திவாய்ந்த அணு ஆயுதத்தை உருவாக்கியுள்ளேன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்:
உலகில் யாரிடமும் இல்லாத ரகசிய அணு ஆயுதத்தை உருவாக்கியுள்ளதாக  அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், உலக நாடுகளை மிரட்டும் வகையில் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் உலகிலே அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கொரோனா தொற்று நோயை கையாண்ட விதம் குறித்து அமெரிக்க பத்திரிகையாளர் பாப் உட்வர்ட் என்பவர் ரேஜ் ( Rage) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியிடப்படவுள்ள இந்த புத்தகத்திலிருந்து  சில தகவல்களை சி.என்.என் செய்தியாக வெளியிட்டுள்ளது. உட்வர்ட் எழுதியுள்ள இந்த புத்தகத்தில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸிடமிருந்து அவரது நடத்தை மற்றும் 2019 டிசம்பர் முதல் 2020 ஜூலை வரை டிரம்ப்பிற்கும் உட்வர்ட்டுக்கும் இடையிலான 18-ஆன்-ரெக்கார்ட் நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டதும் ஆகும்.

பாப் உட்வர்ட்டிடம் டிரம்ப் பேசுகையில், நான் ஒரு அணு ஆயுதம் ஒன்றை உருவாக்கியுள்ளேன். இதற்கு முன்னர் இந்த நாட்டில் யாரும் இல்லாத ஆயுத அமைப்பு. ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அவர்கள் கூட இதற்கு முன்னர் கேள்விப்படாத “பொருள்” அமெரிக்காவில் உள்ளது.எங்களிடம் இருப்பது நம்பமுடியாதது. அந்த ஆயுதம் பிப்ரவரி 2018 இல் அமெரிக்க அணு ஆயுதக் களஞ்சியத்துடன் சேர்க்கப்பட்டது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டுகளை விட அதிக ஆற்றலை கொண்டது என்று தெரிவித்துள்ளார்.

;