tamilnadu

img

கொரோனா வைரஸை ஒழிக்க வாய்ப்பில்லை...  அமெரிக்க தொற்று நோய் நிபுணர் தகவல்... 

வாஷிங்டன்
கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகை தொடர்ந்து மிரட்டி வருகிறது. இதுவரை 1.90 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7.11 லட்சம் பேர் பலியாகியுள்ள நிலையில், 1.21 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல தொற்று நோய் நிபுணரான டாக்டர் அந்தோணி பவுசி உலகத்தில் கொரோனாவை ஒழிக்க வாய்ப்பில்லை என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் விரிவாக கூறியதாவது,"கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது. தடுப்பூசி தொற்று நோயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியுமே தவிர இந்த கிரகத்திலிருந்து வைரஸை ஒழிக்க முடியாது. காரணம் கொரோனா மிகவும் பயங்கரமாக பரவக்கூடிய வைரஸ். அதனால் உலகில் ஒழிப்பது சாத்தியமன்று. எனினும் நல்ல தரமிக்க தடுப்பூசி மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் நாம் கொரோனாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். 2021-ஆம் ஆண்டில் கொரோனா கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என அவர் கூறினார்.  

;