tamilnadu

img

வெண்மணி தியாகிகள் சிற்பம் வடிவமைப்பு

தரங்கம்பாடி, டிச.25- நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகேயுள்ள சீதைசிந்தாமணி என்கிற குக்கிராமத்தை சேர்ந்த ஓவிய கல்லூரி மாணவர் இராதாகிருஷ்ணன். இவர் கீழவெண்மணி தியாகிகளின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக 1 அடி உயரத்தில் சுடுமண் சிற்பத்தை வடித்துள்ளார். இவர் கும்பகோணம் அரசு கவின் கல்லூரியில் முதுகலை சிற்பகலை இரண்டாமாண்டு படித்து வருகிறார். கடந்த 50-வது ஆண்டு நிகழ்ச்சியின் போது உருவாக்கிய சுடுமண் சிற்பத்தை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம் அளித்து பாராட்டு பெற்றார். மார்க்சிஸ்ட் கட்சி குடும்பத்தில் பிறந்த இராதாகிருஷ்ணனின் சகோதரர்கள் 5 பேரும் ஓவியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

;