விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் வரும் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றுm, ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூன் 21-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜூலை 13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.