விழுப்புரம். அக். 17- விக்கிரவாண்டி சட்ட மன்ற தொகுதி இடைத் தேர்த லில் மதச் சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் சார் பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து தமிழக வாழ்வு ரிமை கட்சியின் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக வாழ் வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் தலைமை உரையாற்றினார். அப்போது, “கடந்த காலத்தில் திமுக செய்த சாதனைகளை பட்டியலிட் டார். அதிமுகவின் துரோகத் தையும் சுட்டிக்காட்டினார். இந்த இடைத்தேர்தலி லும், அடுத்து வரும் பொதுத் தேர்தலிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். இந்த தொகுதியில் பேட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந் திக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் திமுக தொகுதி பணிக்குழு தலை வர் க.பொன்முடி (எம்எல்ஏ), ராஜா (எம்பி), எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம், சுந்தரம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் கும ரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.