tamilnadu

img

மழை பெய்யாததால் காயும் கடலை செடி...

வேடசந்தூர்:
 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகையகோட்டை, புதுரோடு, செண்டுவழி, தோப்புப்பட்டி, வைவேஸ்புரம், செங்கோட்டைப்பட்டி, சவரியார்பட்டி, பண்ணைப்பட்டி, கல்லுக்கோட்டை, ஆத்தூர்பிள்ளையூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமப்பகுதியில் கடந்த ஆடி மாதம் பெய்த மழையைத் தொடர்ந்து மானாவரியாக 200 ஏக்கரில் கடலை பயிரிட்டிருந்தனர். 100 நாளில் அறுவடை செய்யப்படுவது வழக்கம. ஆனால் 60 நாட்களுக்கு மேலாகியும் பருவமழை சரியாக பெய்யாததால் கடலை செடிகள் கருகி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

பயிர்க் கடன் இப்பகுதி விவசாயிகளுக்கு கிடைக்காத நிலையில் நகைகளை அடகு வைத்து விதை வாங்கி நடவு செய்துள்ளனர். பருவமழை கைவிட்டதால் கடலைபயிரிட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளை வேளாண்மைத்துறை கணக்கு எடுத்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.